சிங்களத்தின் எல்லை தாண்டிய பயங்கர வாதம் £50000
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பிரெஞ்சுக் காவல்துறையினரால்Villeneuve-Saint-Georgesல் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பாரிஸ் லாச்சப்பல் (பரிஸ் - 18) பகுதியில் பிறிதொரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
33 அகவையுடைய சிறீலங்கா குடியுரிமையுள்ள சந்தேக நபர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கொலைக்கு £50000 யூரோ சன்மானமும், சிறீலங்காவில் தமக்கு சுகபோக வாழ்க்கையை ஏற்பாடு செய்து தருவதாக சிங்கள அரசு இவருக்கு உத்தரவாதம் அளித்ததாகவும் தெரிய வருகின்றது.
கேணல் பரிதி கொலை தொடர்பான விசாரணைகள் மிக முக்கியமான பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கைது தொடர்பான பிரத்தியேகமான செய்தியை நேற்று சங்கதி24 இணையம் வெளியிட்டிருந்த நிலையில் இதனை மிகைப்படுத்தி கற்பனைச் செய்திகள் சிலவற்றை உடனடியாகவே சில தமிழ் இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. எனினும் இக்கற்பனைச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை சங்கதி24 இணையம் உறுதி செய்கின்றது.
தளபதி கேணல் பரிதி தோழர் படம்...


No comments:
Post a Comment