Saturday, 15 February 2014

உன்னால் நான் படைப்பாளி!!



உன்னுடனான,

காதல் கயமைகளில்
கவிமை இலக்கண நோயுற்றேன்;

ஆடை அணிகளில்
வண்ணம் ஓவியம் சேயுற்றேன்;

ஊடல் உரசல்களில்
கற்களை உளித்து புது தாயுற்றேன்;

ஓரிரு கிறுக்கல்கள் கவிதையாவதும்,
சிற்சில பெருக்கல்கள் ஒவியமாவதும்,
பற்பல உடைப்புகள் சிலையாவதும்;

யாதெனில்,
நிலையேயான  கலையாதொரு 
கலையேயான கவிப்பெண்ணை கண்டால்
சிலையோவென கண்ணை மீண்டால்
அலையோவென அள்ளி தெளிக்கிறது
மேற்சொன்ன மூன்றை!! 

-ஆருத்ரன்^

No comments:

Post a Comment