கவிமை இலக்கண நோயுற்றேன்;
ஆடை அணிகளில்
வண்ணம் ஓவியம் சேயுற்றேன்;
ஊடல் உரசல்களில்
கற்களை உளித்து புது தாயுற்றேன்;
ஓரிரு கிறுக்கல்கள் கவிதையாவதும்,
சிற்சில பெருக்கல்கள் ஒவியமாவதும்,
பற்பல உடைப்புகள் சிலையாவதும்;
யாதெனில்,
நிலையேயான கலையாதொரு
கலையேயான கவிப்பெண்ணை கண்டால்
சிலையோவென கண்ணை மீண்டால்
அலையோவென அள்ளி தெளிக்கிறது
அலையோவென அள்ளி தெளிக்கிறது
மேற்சொன்ன மூன்றை!!
-ஆருத்ரன்^

No comments:
Post a Comment