Saturday, 22 February 2014

சொந்தங்கள் இருந்தும் அகதிகள் - நாங்கள்

சொந்தங்கள் இருந்தும் அகதிகள் - நாங்கள் 

நாங்கள் அகதிகள் - 2

வன யுத்தப் பாண்டியம் தோற்றிட
சன சத்தம் தாண்டிய வெற்றிடம் அகழ்கிறோம்
மன மொத்தம் வேண்டிய நற்றிடத் தமிழ்மண்
பிண இரத்தம் தோன்றியும் சுதந்திரம் பெற்றிடா
ரண சித்தம், மொத்தமும் சுத்தமிழந்து நாறிடும்
பண த்திற்கென வேறிடம் புகுந்த அகதிகள் - நாங்கள்

நாங்கள் அகதிகள் - 1

மக்கள் சோலையில் தான் பிறந்தோம் - ஏனோ அன்னியம்!
இடுகாட்டில் மலரும் பூக்களுக்கும் வாசமுண்டு; என்பதை
மனிதநேயம் துறந்த மனித குலம் மறந்து போனதால்
மறுத்தே போனது நெஞ்சம், உடலும் வருந்திக் கொள்ள
அறுத்தே போனது உயிரும் - இங்கு மெல்ல!! 

Saturday, 15 February 2014

உன்னால் நான் படைப்பாளி!!



உன்னுடனான,

காதல் கயமைகளில்
கவிமை இலக்கண நோயுற்றேன்;

ஆடை அணிகளில்
வண்ணம் ஓவியம் சேயுற்றேன்;

ஊடல் உரசல்களில்
கற்களை உளித்து புது தாயுற்றேன்;

ஓரிரு கிறுக்கல்கள் கவிதையாவதும்,
சிற்சில பெருக்கல்கள் ஒவியமாவதும்,
பற்பல உடைப்புகள் சிலையாவதும்;

யாதெனில்,
நிலையேயான  கலையாதொரு 
கலையேயான கவிப்பெண்ணை கண்டால்
சிலையோவென கண்ணை மீண்டால்
அலையோவென அள்ளி தெளிக்கிறது
மேற்சொன்ன மூன்றை!! 

-ஆருத்ரன்^